தாண்டவன்வெளியில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு


(சிவம்)

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்; ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நேற்று தாண்டவன்வெளியில் நடைபெற்றது.

சிறுவர்களுக்கு விளையாட்டுடன் கூடிய கல்வியை வழங்கும்  ( FUTURE MINDS KINDERGARTEN & CHILD CARE )சிறுவர் நலன் நிலையத்தின் ஒருவருட பூர்த்தியை முன்னிட்டு இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாக அதன் நிர்வாக முகாமைத்துவப் பணிப்பாளர் வி.மனோகரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் நிலையத்தினால்; பராமரிக்கப்படும் சிறார்களின் பெற்றோர், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இரத்ததானம் செய்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளைச் சேகரித்தனர்.