மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதை அம்மனின் வருடாந்த உற்சவம்

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மட்டிக்கழி ஸ்ரீ திரௌபதை அம்மனின் வருடாந்த உற்சவம் இன்று 27ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 04ம் திகதி நிறைவுபெறுகின்றது.

அம்பாளின் பங்குனி உத்தர வருடாந்த மகோற்சவம் 27.03.2015ம் திகதி வௌ்ளி ஆரம்பமாகி எதிர்வரும் 04.03.2014ம் திகதி சனிக்கிழமை காலை கும்பசொரிதல் வைபவத்துடன் நிறைவுபெறவுள்ளது.

அம்பாளின் தீமிதிப்பு நிகழ்வு 03.04.2015ம் திகதி வௌ்ளிக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு இடம்பெறும்.

பக்தர்கள் அனைவரும் வருகைதந்து பூசைகளில் கலந்துகொண்டு திரௌபதாதேவியின் அருளைப் பெறுமாறு ஆலய பரிபாலனசபையினர் அழைக்கின்றனர்.