மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத ஒருவரின் சடலம் மீட்பு




(சிவம்)

மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) மிதப்பதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தார்.

சடலம் ஆற்றின் நடுவில் மிதப்பதாகவும் சடலத்தை கரைக்கு கொண்டு வரும் பட்சத்தில் அடையாளம் காண முடியும் என்றும் கரைக்கு கொண்டு வர மீனவர்களின் உதவியைப் பெற நடவடிக்கை எடுப்பதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெட்டியாராட்சி தெரிவித்தார். 

சடலம் வீதியில் யாசகம் பெறுபவர் என பொது மக்கள் தெரிவித்த நிலையில் பொலிசார் சடலத்தை அடையாளம் காண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.