மட்டக்களப்பு - முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் - போட்டோ


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு  - முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் 44வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியுடன் பரிசளிப்பு விழா மற்றும் கௌரவிப்பு நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் கே.சிவனேசராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், சிறப்பு அதிதியாக மாகாணசபை உறுப்பினரும் மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் போன்றோர் கலந்துகொண்டனர்.


நேற்றயதினம் 29ம் திகதி ஆரம்பமான இவ் போட்டி நிகழ்வில் 30 விளையாட்டு அணிகள் பங்குகொண்டு இன்று இரண்டாம் நாள் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றது.

இவ் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தினை கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக் கழகமும், இரண்டாம் இடத்தினை  கூழாவடி டிஸ்கோ விளையாட்டுக் கழகமும், சீலாமுனை ஜங்ஸ்டார் விளையாட்டுக் கழகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.


வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப் பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.

லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தினரால் ஆண்டுதோறும் இவ்வாறு விளைாட்டுப் போட்டியினையும் பரிசளிப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வினையும் நடாத்திவருவதுடன் சமூக சேவைப் பணிகளிலும் ஈடுபட்டு வருவதனை  எம்மால் அறியமுடிகின்றது.