சட்டவிரோத சாராயப் போத்தல்களுடன் பெண் உட்பட இருவர் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் 18 சட்டவிரோத சாராயப் போத்தல்களுடன்  32 வயதுடைய பெண் ஒருவரும் 34 வயதுடைய ஆண் ஒருவரும் நேற்று வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பதில் பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு நேர வீதி கடமையில் ஈடுபட்ட வேளை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் கூறினர்.