பஸ்ஸிற்கு காத்திருந்த பெண் மீது பாலியல் சேஷ்டை; இருவர் கைது

மஞ்சந்தொடுவாய் பிரதான வீதியில் சிறியரக லொறியொன்றினுள் இரு பிள்ளைகளின் தாயொருவரை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக   உட்படுத்தியதாக சந்தேகிக்கிகப்படும் இரு நபர்களை எதிர்வரும் எதிர்வரும் மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று மாலை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.


மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் புதன்கிழமை (26) அதிகாலை 6 மணியளவில் பயணம் செல்வதற்காக வாகனத்தை எதிர்பார்த்து நின்ற 22 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான பெண்ணை காத்தான்குடி நோக்கிவந்த சிறியரக லொறியில் இருவர் ஏற்றியுள்ளனர். லொறியில் ஏற்றிய பெண்ணிடம் குறித்த இருவரும் பாலியல் சேஷ்ட்டை செய்துள்ளதாக தெரியவருகிறது.

கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது.

கணவானால் கைவிடப்பட்ட குறித்த பெண் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

காத்தான்குடி பொலிசார் குறித்த லொறியையும் தடுத்து வைத்துள்துடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.