மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் மற்றும் இலங்கை மருத்துவ சபையின் சுயாதீனத்தை பாதுகாத்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளது.
வேலை நிறுத்தம் காரணமாக சகல வைத்தியசாலைகளினதும் செயற்பாடுகள் முடங்கும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவின் தி சொய்ஷா தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சைட்டம் மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி எமது நாட்டின் இலவச கல்விக்கு பெரும் கேள்விக்குறியினை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் குறித்த தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் சான்றிதழை தற்போது பிரித்தானிய வைத்திய சபையும் ஏற்கமாட்டாது என்ற அறிவிப்பையும் விடுத்திருக்கும் நிலையில் தொடர்ந்தும் போராடி வரும் எமக்கு இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் அரசாங்கம் வழங்காதுள்ளது.
இதேவேளை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு முன்வைத்திருந்த அறிக்கையிலும் பாரிய முரண்பாடுகள் நிலவுகின்றன. இந்த பிரச்சினையானது தேசிய பிரச்சினையாகும். எமது நாட்டின் சுகாதாரத்துறையின் நம்பகத்தன்மை எதிர்காலத்தில் அற்றுப்போவதுடன் இதனால் பாரிய ஆபத்தினையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஆகவே இலவசக்கல்வியை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகவும் சுகாதாரத்துறையை பாதுகாப்பதற்கும் நாம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றோம். இதற்காக பல்வேறு போராட்டங்களையும், வேலை நிறுத்தத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். எனினும் இதுவரையில் அரசாங்கம் உரிய தீர்வினை வழங்காது தொடர்ந்தும் அசமந்தப்போக்கினையே கையாண்டு வருகின்றது.
சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினாலேயே இந்த பாதிப்பு எமக்கு ஏற்படவுள்ளது. சுகாதார அமைச்சரின் தலையீடும் இலங்கை வைத்திய சபையின் சுயாதீனத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எம்மீது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக தெரிவித்து அதற்கு பொதுமக்களை பலிக்கடாக்களாக மாற்ற நினைக்கின்றார்கள்.
எனவே இதற்கான தகுந்த தீர்மானம் ஒன்றினை அரசாங்கம் முன்வைக்கும் வரையில் எமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என்று தீர்மானித்திருக்கின்றோம்.
அதனடிப்படையில் எமது மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாளை (இன்று) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த வேலைநிறுத்தமானது காலை 8 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரையில் அமுல்ப்படுத்தப்படும்.
இதேவேளை மஹரகம புற்றுநோயாளர் வைத்தியசாலை, வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை நிலையம், விபத்துக்கள் பிரிவு, மகளிர் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை என்பனவற்றில் வழமைபோல் அதன் சேவைகள் இடம்பெறும்.
சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி மற்றும் சைட்டம் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்படும். வேலை நிறுத்தம் காரணமாக சகல வைத்தியசாலைகளின் சேவைகளும் நாடளாவிய ரீதியில் முடங்கும். இதனால் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முழுப்பொறுப் பினையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
வேலை நிறுத்தம் காரணமாக சகல வைத்தியசாலைகளினதும் செயற்பாடுகள் முடங்கும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவின் தி சொய்ஷா தெரிவித்தார்.
தொழில்சார் நிபுணர்களின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சைட்டம் மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி எமது நாட்டின் இலவச கல்விக்கு பெரும் கேள்விக்குறியினை ஏற்படுத்தியிருக்கின்றது. அத்துடன் குறித்த தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் சான்றிதழை தற்போது பிரித்தானிய வைத்திய சபையும் ஏற்கமாட்டாது என்ற அறிவிப்பையும் விடுத்திருக்கும் நிலையில் தொடர்ந்தும் போராடி வரும் எமக்கு இதுவரையில் எவ்வித தீர்மானத்தையும் அரசாங்கம் வழங்காதுள்ளது.
இதேவேளை சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு முன்வைத்திருந்த அறிக்கையிலும் பாரிய முரண்பாடுகள் நிலவுகின்றன. இந்த பிரச்சினையானது தேசிய பிரச்சினையாகும். எமது நாட்டின் சுகாதாரத்துறையின் நம்பகத்தன்மை எதிர்காலத்தில் அற்றுப்போவதுடன் இதனால் பாரிய ஆபத்தினையும் எதிர்கொள்ள நேரிடும்.
ஆகவே இலவசக்கல்வியை தனியார் மயப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராகவும் சுகாதாரத்துறையை பாதுகாப்பதற்கும் நாம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து போராடிவருகின்றோம். இதற்காக பல்வேறு போராட்டங்களையும், வேலை நிறுத்தத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். எனினும் இதுவரையில் அரசாங்கம் உரிய தீர்வினை வழங்காது தொடர்ந்தும் அசமந்தப்போக்கினையே கையாண்டு வருகின்றது.
சில அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினாலேயே இந்த பாதிப்பு எமக்கு ஏற்படவுள்ளது. சுகாதார அமைச்சரின் தலையீடும் இலங்கை வைத்திய சபையின் சுயாதீனத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எம்மீது எதிர்ப்பினை வெளிப்படுத்துவதாக தெரிவித்து அதற்கு பொதுமக்களை பலிக்கடாக்களாக மாற்ற நினைக்கின்றார்கள்.
எனவே இதற்கான தகுந்த தீர்மானம் ஒன்றினை அரசாங்கம் முன்வைக்கும் வரையில் எமது போராட்டத்தினை கைவிடப்போவதில்லை என்று தீர்மானித்திருக்கின்றோம்.
அதனடிப்படையில் எமது மத்திய குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நாளை (இன்று) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் 24 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தினை முன்னெடுக்கவுள்ளோம். குறித்த வேலைநிறுத்தமானது காலை 8 மணிமுதல் மறுநாள் காலை 8 மணிவரையில் அமுல்ப்படுத்தப்படும்.
இதேவேளை மஹரகம புற்றுநோயாளர் வைத்தியசாலை, வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை நிலையம், விபத்துக்கள் பிரிவு, மகளிர் மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை என்பனவற்றில் வழமைபோல் அதன் சேவைகள் இடம்பெறும்.
சகல வைத்தியசாலைகளிலும் கறுப்புக்கொடி மற்றும் சைட்டம் எதிர்ப்பு பதாகைகள் காட்சிப்படுத்தப்படும். வேலை நிறுத்தம் காரணமாக சகல வைத்தியசாலைகளின் சேவைகளும் நாடளாவிய ரீதியில் முடங்கும். இதனால் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களுக்கான முழுப்பொறுப் பினையும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.