கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசண கால்நடை உற்பத்தி மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கின் எழுச்சி

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசண கால்நடை உற்பத்தி மீன்பிடி,கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கின் எழுச்சி -2017,கண்காட்சியும் விற்பனையும் இன்று கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இன்று 22 இடம்பெற்றது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட் வடமாகாண சபை பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இக்கண்காட்சியை திறந்து வைத்தனர். இக்கண்காட்சியின் போது உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவிகளால் கலாச்சார நடனங்கள் நடைபெற்றதுடன் தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் நிர்மாணிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் கிராமத்து விவசாய பொருட்கள் உணவுவகைகள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டதுடன் இக்கண்காட்சியானது நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.