கவனிப்பாரற்ற நிலையில் செட்டிபாளையம் தகரக்கால்வாய் ! தொற்று நோய் பரவும் அபாயம்

செட்டிபாளையம்  தகரக்கால்வாய்   ஆறுமாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட  அனர்த்தமுகாமைத்த பிரிவினரால் செட்டிபாளயத்தில் கால்வாய் போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தனிப்பட்ட. நபர்களின் செயற்பாட்டால் குறித்த கால்வாயின் நிதி மீளப்பெறப்பட்டதாகவும் ஊர் மக்கள் விமர்சனம் தெரிவிக்கின்றனர் .

தற்போது  மழைக்காலம் என்பதால் குறித்த கால்வாய் தோண்டப்பட்ட இடங்களில் நீர் தேங்கி இருப்பதும் இதனால் நுளம்புகள் பெருகுவதோடு பல்வேறுபட்ட சுகாதார. பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது,

புதிதாக அரச அதிபராக கடமையேற்றிருக்கும்   உதயகுமார் அவர்கள் இதுதொடர்ப்பாக   நடவடிக்கை எடுப்பார் என ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர் .

 அதிகாரிகள் ஏன் இதனை கண்டுகொள்ளவில்லை? குறித்த பிரச்சினை தொடர்பாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடன் ஆரம்பித்து சுகாதாரப்பிரச்சினைகளை தவிர்க நடவடிக்கையெடுக்குமாறு  ஊர் மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்
 ( ஜெய் அன்டனி)