வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பிரதேசத்தில் 'குஞ்சடப்பன் திடல்' பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த  இருவர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (12) திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. திருகோணமலை தம்பலகாமம் பகுதியிலிருந்து கிண்ணியா வந்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும், வெள்ளை மணல் பகுதியில் இருந்து தம்பலகாமம் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இவ்விபத்து இடம்பெற்றதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன் மற்றொருவர் தம்பலகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் வெள்ளை மணல்  ஹிஜ்ரா நகரைச் சேர்ந்த முஹம்மது சித்தீக் பாஹீம் அக்ரம் (21), வெள்ளை மணல் சீனக்குடாவைச் சேர்ந்த  முஹம்மது நளீம் நவீத் இலாஹி (20) ஆகியேர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது உயிரிழந்த இருவரின் சடலமும் தம்பலகாமம் வைத்திய சாலையில் வைக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணையை, தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.