மட்டக்களப்பு, செங்கலடி பிரதேசத்திலுள்ள சந்தை ஒன்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயன பதார்த்தம் பூசப்பட்ட பெரும் தொகையான வாழைப் பழங்களை சுகாதாரத் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் செங்கலடி பிரதேச சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, சித்தாண்டி சந்தைப் பகுதிக்கு சென்று இரசாயனப் பதார்த்தம் பூசப்பட்ட நிலையில் இருந்த 134 வாழைக்குலைகளை கைப்பற்றியுள்ளனர். வாழைக் காய்களை பழுக்கச் செய்வதற்காக ஆர்.ஜி.எதபோன் ((RG Ethepon) என்ற இரசாயனப் பதார்த்தங்கள் வாழைக் குலைகளில் பூசப்பட்டிருந்தென பொதுச் சுகாதாரப் பரிசோதகர் செல்வராஜா தவேந்திரராஜா குறிப்பிட்டார்.
அத்துடன் இரசாயன பதார்த்தம் காய்களைப் விரைவாகப் பழுக்கச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டாலும், வாழைக் காய்களில் பூசிப் பயன்படுத்தப்படுவதில்லை. மூடிய அறையினுள் குறித்த பதார்த்தத்தின் போத்தல் மூடியை திறந்து வைப்பதன் மூலம் காய்கள் விரைவாக பழமாகும். இதைத் தோலில் பூசுவதினால் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் மீட்கப்பட்ட வாழைக்குலைகளை உரிமையாளரின் அனுமதியுடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அழித்ததுடன், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
. .
.
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4