இரண்டு பேருந்துகள் மோதிய பாரிய விபத்தில்! 37 பேர் வைத்தியசாலையில்! பலரின் நிலை கவலைக்கிடம்!


இரத்தினபுரி - காவத்தை யா-இன்ன சந்திப் பகுதிக்கு அருகில் இன்று முற்பகல் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 37 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, காவத்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களுள் 21 பேர் பெண்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

எம்பிலிப்பிட்டிய முதல் கேகாலை நோக்கியும், காவத்தை முதல் மாகந்துர நோக்கியும் பயணித்த தனியார் பேருந்துகள் மோதியதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பேருந்துகளின் சாரதிகளினது கவனயீனத்தால் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.