இதற்கமைய, 150 பாடசாலைகளை சேர்ந்த 14 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்சார் பாடவிதானத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடந்த வருடம் மே மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தொழில்சார் பாடங்களை கற்றுவருகிறார்கள்.
இதற்குத் தேவையான இரண்டாயிரத்து 400 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 150 பாடசாலைகளில் 417 ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கப்படவிருக்கின்றன.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், சித்தியடையாத மாணவர்களுக்கும் இந்தப் பாடநெறியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், சித்தியடையாத மாணவர்களுக்கும் இந்தப் பாடநெறியில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.