விசேட தேவையுடையோர்களுக்கான கால்பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் 14, 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இப்போட்டிக்கு பிரதான அனுசரணையாக K.K. சண்முகம் மற்றும் TR அறக்கட்டளை ஆகியன அங்கம் வகிக்கின்றது.
இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட
கட்டுப்பாட்டு சபையில் பதிவு செய்யப்பட்ட அணிகளை உள்ளடக்கிய அணிக்கு ஆறுபேர் கொண்ட கடினபந்து சுற்றுப்போட்டி பிரமாண்டமான முறையில் ஜூலை மாதம் 27,28,29 ஆகிய மூன்று தினங்களில் சிவானந்தா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற உள்ளது.
இப்போட்டிகள் Chandra group of companies United Kingdom இன் பிரதான அணுசரணையின் கீழ் இடம்பெற உள்ளது.
இப்போட்டிகளுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம், இடத்தினை பெறும் அணிகளுக்கு முறையே 100,000/=, 50,000/=,25,000/= பணப்பரிசுமற்றும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட உள்ளது.
இதேவேளை, அணிகளின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் முதலில் பதிவு செய்யும் 24 அணிகள் மாத்திரமே போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு - 0772293731