மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் ஜெயந்திரகுமார் மீது தாக்குதல் முயற்சி


(சிவம்)

மட்டக்களப்பு மாநகர சபையின் திருச்செந்தூர் 12 ஆம் வட்டார உறுப்பினர் சீனித்தம்பி ஜெயந்திரகுமார் மீது நேற்றிரவு (09) இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடாத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

பொல்லு மற்றும் தடிகளுடன் 15 பேர் கொன்ட கும்பல் குறித்த உறுப்பினரைத் தாக்குவதற்கு அவரது இல்லத்திற்கு வந்தபோது அவர் வீட்டில் இல்லாததினால் அவரது வீட்டில் இருந்த அவரது ஆதரவாளர் பூபாலபிள்ளை இந்திரன் தலையில் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிசா தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.