கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலய சப்பறத் திருவிழா நகர் வலம்


(சிவம்)

மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 9 ஆம் நாள் முத்துச் சப்பறத் திருவிழாவையொட்டிய நகர் வலம் இன்று மாலை (12) நகரின் பிரதான விதிகளில் நடைபெற்றது.

ஆலய மற்றும் மஹோற்சவப் பிரதம குரு சிவஸ்ரீ நவரத்தின முரசொலிமாறக் குருக்கள் தலைமையில் திருவிழாக் கிரியைகள் இடம்பெற்று பன்சாலை விதி, அரசடிப்பிள்ளையார் ஆலய விதி, பயனியர் விதி, தாமரைக்கேணி விதி, செங்குந்தர் விதி, பார் விதி, புகையிரத நிலைய வீதி மற்றும் திருமலை விதி வழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது.

குறித்த விதிகளில் விநாயகப் பெருமானுக்கு அடியாhகள் பூரண கும்பங்கள் வைத்து வரவேற்றதோடு எம்பெருமான் அடியார்களுக்கு அருள் பாலித்தார்.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 11 நாட்கள் கொண்ட திருவிழாவின் 10 ஆம் நாள் தீர்த்தோற்சவம் நாளை வியாழக்கிழமை (13) காலை ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் தீர்த்தக் குளத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.