மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியில் குஞ்சான்ஓடை பாலத்திற்கு அருகில் இன்று (20) காலை 06.00 மணியளவில் மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞன் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில், ஸ்தலத்தில் பலியாகியுள்ளாரென, பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மாட்டுடன் மோதியே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில், ஊரனி கனகர் கிராமத்தைச் சேர்ந்த, திருச்செல்வம் ஜினிஜன் (வயது-19) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவ் விபத்து தொடர்பான, மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.