மாணவர்களின் போசாக்கிற்காக ஆரோக்கியமான சிற்றூண்டிச்சாலை!


மாணவர்களின் போசாக்கை மேம்படுத்துவதற்காக பாடசாலைகளில் ஆரோக்கியமான போசாக்கு உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

தவறான உணவு பழக்கம், சுகாதார பிரச்சினை பலவற்றுக்கு காரணமாக அமைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தொற்றா நோய் இதில் ஒன்றாகும். தொற்றா நோயின் காரணமாக நாளாந்தம் 9 பேர் உயிரிழப்பதாக புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை கவனத்தில் கொண்டு ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.