மட்டக்களப்பில் சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்!


மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்ட அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் அங்கு சிவில் சமூகத்தின் பிரதிநிதிகளை சந்திதித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது சகவாழ்வு மற்றும் நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுப்பது மற்றும் அதில் அவர்கள் எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

அத்தோடு மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது என அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.