பஸ்கள் அதிக வேகமாகப் பயணித்தால் 1955க்கு முறையிடவும்



அதிக வேகத்துடன் பயணிக்கும் பஸ்கள் தொடர்பில், 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைபாடு செய்யுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு வேகத்துடன் பயணிக்கும் பஸ் வண்டிகளின் சாரதிகளின் சேவையை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தும் வகையிலான சட்டமொன்று உள்ளதாகவும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கும் முறைபாடுகளுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஜனித மல்லவாராச்சி தெரிவித்துள்ளார்.