வெல்லாவெளியில் குண்டு மீட்பு




(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சின்னவத்தை பொலிஸ் சாவடிக்கு அருகாமையில் வாய்க்காலில் இருந்து குண்டு ஒன்று நேற்று (08) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பொலிஸ் சோதனைச் சாவடி பகுதியில் இருந்து சமார் 150 மீற்றர் தூரத்தில் உள்ள வாய்கால் பகுதியில் சம்பவதினமான நேற்று மாலையில் குண்டு ஒன்று இருப்பதை பொலிஸார் கண்டுள்ளனர். 

இதனையடுத்து குறித்த குண்டை மீட்டு செயலிழக்க நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளதுடன் இதனை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினால் செயலிழக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.