கோழிப்பண்ணையினை அகற்றக்கோாி ஆா்ப்பாட்டம்



(மு.கோகிலன்)


முறக்கொட்டான்சேனை கோரலங்கேணி கிராமத்தில் தனியார் ஒருவரினால் நடாத்தப்பட்டு வரும் கோழிப் பண்ணையினை அகற்றித் தருமாறு கோரி பிரதேச மக்கள் சிலரால் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ் கோழிப்பண்ணையினால் தமக்கு பல்வேறுபட்ட சுககாதாரப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இவ் விடயம் தொடர்பாக சம்பவ இடத்தி;ற்கு வருகை தந்த வாழைச்சேனை பிரதேச சபையின் அதிகாரிகள் மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

தங்களது சபையில் இதற்கான அனுமதி பெறப்படவில்லையென இதன்போது தெரிவித்தனர். இருந்தபோதிலும் இதற்கான அனுமதியினை ஏறாவூர்பற்று பிரதேச சபையில் பெற்றுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஆனால் கோழிப்பண்ணை அமைந்துள்ள இடமானது வாழைச்சேனை பிரதேச சபை எல்லைக்குள்ளே அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கான நல்லதொரு தீர்வினை பெற்றுத்தருவதாக வாழைச்சேனை பிரதேச சபை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளனர்.