பிள்ளையானை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய வரதராஜ பெருமாள்


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலைமைச்சர் வரதராஜ பெருமாள் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை இன்று திங்கட்கிழமை(9) மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது அரசியல் உள்ளிட்ட பலவிடையங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக அறியமுடிகின்றது.

இச் சந்திப்பின் போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ. பிரசாந்தன், வவுணதீவு பிரதேசசபை உறுப்பினர் குகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.