சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் கைது




தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, கோகிலாய் கடல் பகுதியில் நேற்றைய முன்தினம் கடற்படையால் மேற்கொன்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந் நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் 20 முதல் 41 வயது வரையிலான புல்முட்டை சேர்ந்தவர்கள் என விசராணையில் தெரியவந்துள்ளது.

அத்தோடு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரு மீன்பிடி படகுகள், இரு வெளிப்புற மோட்டார்கள் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிலோ கிராம் மீன் மற்றும் ஒரு தடைசெய்யப்பட்ட வலை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள், வெளிப்புற மோட்டார்கள் மற்றும் சட்டவிரோத வலை மேலதிக விசாரணைகளுக்காக குச்சவேலி, மீன்வள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இது போன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.