இலங்கையை அழகு படுத்தும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு இளைஞர்கள் பொலிஸ் விடுதியின் சுற்று மதிலுக்கு வர்ணம் பூசும் நடவடிக்கை

(க.சரவணன்)
இலங்கையை அழகு படுத்தும் தொனிப் பொருளின் கீழ் மட்டக்களப்பு இளைஞர்கள்  நகர் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் விடுதியின் சுற்று மதில் சுவருக்கு வர்ணம் பூசும் நடவடிக்கையை கொட்டும் மழையிலும் மேற்கொண்டு வருகின்றனர் .
இந்த தொனிப் பொருளின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கள் கலாச்சாரத்தையும் எங்களுடைய திறைமைகளையும் வெளிப்படுத்தும் நோக்கத்துடன் மட்டக்களப்பு இளைஞர்கள் ஆகிய நாங்கள் ஒன்றினைந்து இந்த சுவருக்கு முதற்கட்டமாக வர்ணம் பூசும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும்

எவருடைய ஒத்துழைப்புமின்றி இளைஞர்களாகிய நாங்கள் இந்த திட்டத்தை முதலில் கையில் எடுத்து இதனை இரவு பகலாக கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது இந்த நடவடிக்கையை செய்துவருவதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.