முறாவோடை இடைத் தங்கல் முகாமுக்கு தமிழரசு கட்சி மகளிர் அணி நிவாரண உதவி


கோறளைப் பற்று முறாவோடை சக்தி வித்தியாலயத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இடம் பெயர்ந்து இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள் சுமார் 48 குடும்பங்களையும் பார்வை இட்டதுடன், அவர்களுக்கு தேவையான உதவிகளை இலங்கை தமிழரசு கட்சியின் மகளிர் அணியினர் செய்துள்ளனர். மகளிர் அணியின் உறுப்பினர் கந்தையா கலைவாணி நேரடியாக விஜயம் செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவியை முன்னெடுத்திருந்தார்.

இவ் உதவியினை கனடாவில் வசிக்கும் தேவகுரு இளையதம்பி அவர்கள் வழங்கி இருந்தார்.

இடை தங்கல் முகாமில் இருந்த 48 குடும்பங்களுக்கும் படுக்கை போர்வைத் துணியும் சிறுவர்களுக்கான பால்மா போன்றவையும் வழங்கப்பட்டது.

இவ் நிவாரண உதவியின் போது உதவிய கிராம உத்தியோகஸ்த்தர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் சகோதரர் வாசு ஆகியோருக்கு கந்தையா கலைவாணி அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.