ஜனாதிபதியின் துப்பரவு செய்யும் வேலைத்திட்டம்



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் தூய்மையாக்கும் வேலைத் திட்டம் சனிக்கிழமை (30.11.2019) ஆரம்பிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன ஜய பெரமுன, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதி தவிசாளர் அஹமட், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்கள் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடி வரை தூய்மையாக்கும் வேலைத் திட்டம் இடம் பெற்றது.