மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக திருமதி .தவதிருமகள் உதயகுமார் !

(LEON)
மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக
திருமதி .தவதிருமகள் உதயகுமார் கடமைகளை இன்று பொறுப்பெற்றுக்கொண்டார். மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றிய திருமதி .ஹரணியா சுபாகரன் மட்டக்களப்பு கல்விவலய அலுவலகத்திற்கு இடமாற்றம் பெற்று செல்லவுள்ள நிலைலையில் வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலைக்கு புதிய அதிபராக மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் கல்லூரியில் அதிபராக கடமையாற்றிய திருமதி .தவதிருமகள் உதயகுமார் அதிபராக தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.மட்டக்களப்பு கல்விவலயத்தின் மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர்
கல்லூரியில் கடந்த ஆறு வருடங்களாக அதிபராக கடமையாற்றிய திருமதி
தவதிருமகள் உதயகுமார் அதிபரை வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு கல்லூரி
ஆசிரியர்கள் , மாணவர்களின் ஏற்பாட்டில் கல்லூரியில் நடைபெற்றது கல்லூரி பொறுப்புக்களை பிரதி அதிபருக்கு ஒப்படைத்த அதிபர் திருமதி .தவதிருமகள் உதயகுமார் மட்டக்களப்பு ஆனைப்பந்தி தேவஸ்தானத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார் இதனை தொடர்ந்து மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் மற்றும் பாடசாலை
ஆசிரியர்கள் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.