தொடர் வேலை­நி­றுத்தப்போராட்­ட­த்துக்கு தயா­ராகும் புகை­யிரத ஊழி­யர்கள் !


புகை­யி­ரதத் திணைக்­க­ளத்தில் கடந்த ஆறு  வரு­ட ­கா­ல­மாக தற்­கா­லிக மற்றும்  ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்­த­ வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­குவ­தற்கு புகை­யி­ரதத் தொழிற்சங்­கங்கள் அர­சாங்­கத்­துக்கு 48  மணி­ நேர கால  அவ­காசம் வழங்­கி­யுள்­ளன.
உரிய  காலப்­ப­கு­தியில்  தீர்வு கிடைக்­கப்­பெ­றா­விடின் அடுத்த கட்­ட­மாக வேலை­நி­றுத்­தத்­துக்குச் செல்ல தீர்­மானம் எடுக்­கப்­படும் என புகை­யி­ரத தொழிற்சங்கம்  எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. 

இது தொடர்பில் புகை­யி­ரதத் தொழிற் சங்­கத்தின் தலைவர் எஸ்.பி.விதா­னகே கருத்துத் ‍தெரி­விக்­கையில், இலங்கை புகையி­ரதத்   திணைக்­க­ளத்தில்  கடந்த ஆறு  வரு­ட­ கா­ல­மாக  தற்­கா­லிக  மற்றும் ஒப்­பந்த அடிப்­ப­டையில் தொழில் புரிந்த ஊழி­யர்­க­ளுக்­கான நிரந்­தர நிய­ம­னங்­களை வழங்­கு­மாறு கோரி கடந்த திங்­கட்­கி­ழமை ஜனா­தி­பதி செய­ல­கத்­துக்கு  முன்­பாக  எதிர்ப்பு 
ஆர்ப்­பாட்டத்தில்  ஈடு­பட்­டி­ருந்தோம் .

அதன் போது ஜனா­தி­பதி  செய­ல­கத்தில்  எமது கோரிக்­கையை  முன்­வைப்­ப­தற்­கான  சந்­தர்ப்பம்  வழங்­கப்­பட்­டது. இருப்­பினும்  அந்தக் கலந்­து­ரை­யா­டலின் போது எமது பிரச்­சி­னைக்குத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை.  நேற்­றைய தினம் (புதன்­கி­ழமை)  போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் மற்றும்  உரிய  உயர்  அதி­கா­ரி­க­ளு டன்  கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு நிரந்­தர நிய­ம­னங்­களை  வழங்­கு­வ­தற்­கான  அமைச்­ச­ரவைப் பத்­திரம் சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை  எடுக்­கப்­படுவ­தாக ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­டலின் போது தெரி­விக்­கப்­பட்­டது.

அதே­வேளை, அந்த அமைச்­ச­ரவைப்  பத்­தி­ரத்­துக்­கான  அனு­மதி  கிடைக்­கப்­பெற்­ற தும் அடுத்த 48  மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நிய­ம­னங்­களை  வழங்­கு­வ­தற்­கான  ஏற்­பா­டுகள்  மேற்­கொள்­ளப்­படும் எனவும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில்  நிரந்­தர தொழில் நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டா­விடின்  தொழில் சங்கங்களுடன்  கலந்துரையாடலை  மேற்கொண்டு இறுதிக் கட்ட முடிவு  எடுக்கப்படும். அதற்கமைய  அடுத்த கட்டமாக  தொடர்  போராட்டத்துக்கோ  அல்லது வேலை நிறுத்தத்துக்கோ செல்லத் தயாராகவே உள்ளோம் எனத் தெரிவித்தார்.