மட்டக்களப்பு கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம் !


மட்டக்களப்பு - கல்குடா, வெள்ளக்காடு கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள சடலம் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலம் எனத் தெரிவிக்கும் பொலிஸார் குறித்த சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லையென தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.