52 மதுபான போத்தல்களுடன் மஸ்கெலியாவில் இருவர் கைது !



மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் 52 மதுபான போத்தல்களை ஆட்டோவில் எடுத்துச்சென்ற இருவர் மஸ்கெலியா பொலிஸாரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊரடங்குச்சட்டம் நீக்கப்படும் காலப்பகுதியில் மது விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளபோதிலும் மஸ்கெலியாவிலுள்ள தோட்டப் பகுதியொன்றில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே மஸ்கெலியா நகரின் பிரதான வீதியில் , இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மஸ்கெலியா பொலிஸின் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.