கொரோனா வைரஸ் தொற்றுடன் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் !



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது.

எனினும், கடந்த 24ம் திகதி மாலை 4.30 மணியிலிருந்து இன்று மாலை 5 மணி வரையில் கொரோனா தொற்றுடன் எவரும் அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், இலங்கையிலும், கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த நிலையில், நேற்று முன்திம் வரையில் 102 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி  சிகிச்சை பெற்று வந்த மேலும் நான்கு பேர் குணமடைந்த நிலையில், இன்று வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.