பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று!

பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது குறித்து பிரிட்டனின் கிளாரன்ஸ் ஹவுஸ் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், ," கொரோனா வைரஸ் அறிகுறி காரணமாக கடந்த சில நாட்களாகவே தனிமையில் இருந்த இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.​ே

அவரது மனைவி காமில்லாவிற்கு சோதனை நடத்திய போது அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் தற்போது ஸ்காட்லாந்தில் இருக்கின்றனர். சுய தனிமைப்படுத்துதலை பின்பற்றுகின்றனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, இளவரசர் சார்லஸ் மொனாக்கோவின் இளவரசரை மட்டுமே சந்தித்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

71 வயதான அவர், ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரண்மனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ல்ஸூம் அவரது மனைவி காமிலாவும் பெல்போரலில் சுயத்தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் ஐந்து நாள்களாக வீட்டிலிருந்தே பணிப்புரிந்து வருவதாகவும் அரண்மனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.