மருந்தகம் ஒன்றிலிருந்து 12,900 ருபா பெறுமதியாக மருந்து வகைகள் கொள்ளை - குறித்த திருட்டு சம்பவம் சீ.சீ.டி.வி.யில் பதிவு

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)
ஊரடங்கு சட்டம் நாவலபிட்டி பகுதியில் வரையரையின்றி அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் குறித்த பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் உட்புகுந்து மருந்தகத்தில் இருந்த 12900ருபா பெறுமதியான மருந்துகளை கொள்ளையடித்துள்ள சம்பவம் ஒன்று 05.04.2020 ஞாயிற்றுகிழமை இடம்பெற்றுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இனந்தெரியாதவர் ஒருவரினால் குறித்த மருந்தகத்தில் உட்புகுந்து மருந்து வகைகளை கொள்ளையிடும் காட்சி குறித்த மருந்தகத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டி.வி.கேமராவில் பதிவாகியுள்ளது. குறித்த காட்சி பதிவாகியமையை வைத்து நாவலபிட்டி பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது