15 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தே நபர் விளக்கமறியலில்

(எப்.முபாரக்)
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினைந்து வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தே நபரை அடுத்த ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் நேற்று(30) உத்தரவிட்டார்.

சின்னக்குளம், பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


குறித்த சந்தேக நபர் இத்திக்குளம் பகுதியிலுள்ள பதினைந்து வயதுடைய சிறுமியொருவரின் வீட்டுக்குச் சென்று தனிமையில் இருக்கும் போது துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கைது செய்து பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.