அரச அதிகாரிகள் சிலர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்கள் அனைவரும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இன்று(07) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட கலந்துரையாடலிற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. விஷேடமான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


இந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.