மட்டக்களப்பு வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்



(எஸ்.நவா)
கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்கதும் மிகவும் தொன்மையானதுமான மட்டக்களப்பு வெல்லாவெளி ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 25.06.2020 பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாகி 05.07.2020ம் திகதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமை காரணமாக சுகாதார பிரிவு பொலிஸ் ஆகியோர்களின் ஆலோசனைகளை பின்பற்றி சமூக இடைவெளிகளை பேணி இவ் உற்சவம் இடம்பெற்றது.

25.06.2020 தொடக்கம் 01.07.2020 திகதி; வரை திருச்சடங்கும் 02..07.2020 திகதி வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த கல்லடி பிள்ளையார் ஆலயத்தில் பகல் நிகழ்வாக வதனமார்களுக்கான பால்பள்ளைய பூசைகளும் இடம்பெற்றிருந்தது. 03.07.2020ம்திகதி இரவு திருவிழாவும் தீமிதிப்பும் தவநிலையும் இடம்பெற்றிருந்தபோது ஏராளமான அடியார்கள் புடைசூழ திருவிழாவும் தீமிதிப்பும் இடம்பெற்றிருந்தது 05.07.2020 திகதி தீர்த்த உற்சவத்துடன் இனிது நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.