கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் (14) கொழும்பு மாநகரசபை சபையின் நிதித்திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர மேயர், மாநகர ஆணையாளர் மற்றும் ஏனைய அனைத்து மாநகர சபை உறுப்பினர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்தார் .