மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா ! கிழக்கில் கொரோனா எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது




மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய போரதீவு பட்டபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக பி.சி.ஆர் பரிசோதனையில் இன்று வியாழக்கிழமை கண்டுப்பிடிக்கப்படதையடுத்து 31 ஆக அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ..லதாகரன் தெரிவித்தார் .

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கமைய குறித்த நபரை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கோட்டுக் கொண்டுள்ளார் 
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்