
(சந்திரன் குமணன்)
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் .
இன்று காலை உயர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மாதவனை மயிலத்தை மடு மேய்ச்சல் தரை வழக்கு எடுத்துக் கொள்ளபட்டது. பால் பண்ணையாளர்கள் தொடர்ந்து தங்களுடைய நான்கு இலட்சத்து மேற்பட்ட கால்நடைகள் வாழ்கின்றன என்றும் மகாவலி அபிவருத்தி சபையினாலும் வேறு அரச நிறுவனங்களினாலும் வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளை கொண்டு வந்து சோளம் பயிர்ச்செய்கைக்காக நிலம் கொடுக்கபட்டதனை தடுப்பதற்காகவும் அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதங்களில் ஒருவர் மாத்திரம் பிரசன்னமாகி இருந்தார்.
ஏனைய ஐந்து பிரதிவாதிகள் பிரசன்னமாகி இருக்கவில்லை. மீண்டும் அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து பெப்ரவரி 26 திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக தீர்க்ப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை சம்பந்தமான அனைத்து விடையங்களும் இந்த வழக்கில் சரியான உத்தரவுகளை பெற்று தீர்த்துக் கொள்ளலாம் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.
இதன் போது மனுதாரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
மயிலத்த மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 13 திகதி மேய்ச்சல் தரை சம்பந்தமான மாதவனை மயிலத்தை மடு பிரதேத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதன் போது மனுதாரர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
மயிலத்த மடு பண்ணையார்கள் சார்பான வழக்காளிகளாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா.சாணக்கியன் , கோவிந்தன் கருணாகரன் இருவரையும் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஊடாக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் 13 திகதி மேய்ச்சல் தரை சம்பந்தமான மாதவனை மயிலத்தை மடு பிரதேத்தில் வைத்து குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.