மட்டக்களப்பு வாழச்சேனையில் ஹரோயின் போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றி இராணுவச் சிப்பாய் ஒருவரை சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரினை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 3 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி இராணுவ முகாமில் கடமையாற்றி இராணுவச் சிப்பாய் ஒருவரை சம்பவதினமான நேற்று செவ்வாய்கிழமை இரவு இராணுவ முகாமில் வைத்து 130 மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரினை இன்று வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 3 ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.