மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் 20 வயதுடைய இளைஞன் பலி

 

மட்டக்களப்பில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . 

நேற்று (09) முகத்துவாரத்தில் இருந்து மட்டக்களப்பு  செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 கருவேப்பங்கேணியை  சேர்ந்த  20 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் இரு இளைஞர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்