தேசிய எரிபொருள் வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அனுமதி



இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டு நிறுவனமாக தேசிய எரிபொருள் வாயு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டு 21 ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் 5ஆம் பகுதியின் பிரகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குமான பொறுப்புகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.