ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம்



ஒமிக்ரோன் பிறழ்வால் நாட்டில் ஐந்தாவது கொரோனா அலை உருவாகும் அபாயம் இருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

நீண்ட வார இறுதியில் பொது ஒன்றுகூடல்களால் அடுத்த இரு வாரங்களில் பதிவாகும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரான வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

ஒமிக்ரோன் பிறழ்வின் அதிகம் பரவும் தன்மையால் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் ஒரு உயகொரோனா வைரஸின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருப்பதால், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் புதிய பிறழ்வுகளை அடையாளம் காணும் சோதனையை முன்னெடுப்பதற்கு நாட்டின் பிற பல்கலைக்கழகங்களிலும் வசதியை ஏற்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மாத்திரமே தற்போது இலங்கையில் தொடர்புடைய சோதனைகளை முன்னெடுக்கும் ஒரே இடம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்ர்வு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.