இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படுகின்றன


வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மதுவரி ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயற்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.