கல்முனை பவுசர் கொழும்பு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில் வைத்து வீதியில் கலனில் கார் ஒன்றிற்கு பெட்ரோல் வழங்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது .
இது தொடர்பில் கல்முனை திலகா எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின் விளக்கம் ,
திலகா எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சொந்தமாக 4 பவுசர்கள் உள்ளது. தற்போது வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கின்றன
அதில் ஒன்றில் திருகோணமலையில் வாங்கிய பெற்றோலை கொழும்பில் வசிக்கும் குறித்த பவுசர் உரிமையாளரிற்கு வழங்குவதற்காக வீதியில் நிற்பாட்டி கொண்டுவந்த கலனை ஊழியர் வழங்கியிருந்தார் .
குறித்த பவுசரில் டீசல் தான் இருந்துள்ளது மேலும் பவுசர் சீல் உடைக்கப்படவில்லை என தெரிவித்தனர்