ஜனாதிபதிக்கும் சீன தூதுவருக்கும் இடையில் சந்திப்பு !



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீனத் தூதுவர் Qi Zhenghong அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்து தெரிவித்த சீனத் தூதுவர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினார்.

'ஒரே சீனா' கொள்கையை இலங்கை கடைப்பிடிப்பதுடன், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகிய ஐ.நா சாசனக் கோட்பாடுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய பூகோள பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை நாடுகள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதிஇ பரஸ்பர மரியாதை மற்றும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாமை என்பன அமைதியான ஒத்துழைப்பிற்கும் மோதல்களைத் தவிர்ப்பதற்கும் முக்கியமான அடிப்படையாகும்.