மட்டக்களப்பு மத்தி கல்வி வலய மதீனா வித்தியாலய பாடசாலை கட்டடத் தொகுதி திறப்பு விழா !



(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான கேணிநகர் மதீனா வித்தியாலயத்தில் ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு திறப்பு விழாவும், பாடசாலை இரண்டாவது பரிசளிப்பு விழாவும் நேற்று  புதன்கிழமை இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.மீரா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ் உமர் மௌலானா, ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜூனைட் நளீமி, பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜூன் நிஸா, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.யூ.எம்.இஸ்மாயில், எம்.ஏ.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான ஏ.எல்.சலாம், எம்.பீ.எம்.சித்தீக் மற்றும் ஓட்டமாவடி வர்த்தக சங்கத் தலைவரும் சமுகசேவையாளருமான எம்.ஏ.சீ.எம்.நியாஸ் ஹயா இன்ரனஸனல் கலக்ஷன் நிறுவன பணிப்பாளர் ஏ.எல்.நஜிமுதீன் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

ஐ.எஸ்.ஆர்.சீ. சிறிலங்கா அமைப்பின் ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் அதிபர் காரியாலயம், கலாச்சார மண்டபம், மாணவர்களுக்கான வகுப்பறை தொகுதி ஆகியவை அமைந்துள்ளதுடன், அதற்கான தளபாடங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையில் இரண்டாவது பரிசளிப்பு விழாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும், வகுப்பு பாடங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.