இலங்கையிலிருந்து கனடாவுக்கு பயணிக்கும்போது மூழ்கிய படகிலிருந்து 300 பேரை சிங்கப்பூர் மீட்டுள்ளது


இலங்கையிலிருந்து கனடாவிற்கு சட்டவிரோதமாக பயணித்த படகு மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தன . 

அகதிகள் என சந்தேகிக்கப்படும் ஏறக்குறைய 300 பேர் சிங்கப்பூர் அதிகாரிகளால் படகு மூழ்கியதில் இருந்து மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா கூறுகையில் .

 படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார் , இதனையடுத்து  கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்தார்.

பின்னர் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி செல்வதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்தனர்.

கப்பலில் இலங்கையர்  இருப்பது கடற்படையினருக்கு மட்டுமே உத்தியோகபூர்வமாகத் தெரியும் எனவும், ஏனையவர்கள் வியட்நாமில் தரையிறங்கிய பின்னர் அடையாளம் காணப்படும் எனவும் டி சில்வா தெரிவித்தார்.

கடந்த காலங்களில் யுத்தம்  காரணமாக  தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத படகுப் பயணங்களை மேற்கொண்டனர். 

தற்போது சிலர்  பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்து வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.