ஒட்டுசுட்டானில் கணவனை இழந்த பெண்ணிற்கு இராணுவத்தின் கட்டுமானத்தில் புதிய வீடு !


கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் வகுப்பு பழைய மாணவர்கள் (1980) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அனுசரணையினால், ஒட்டுசுட்டான் கணவனை இழந்த பெண்ணிற்கு ஒரு புதிய வீட்டினை படையினர் நிர்மாணித்தனர்.

நவம்பர் 9 ஆம் திகதி புதிய இல்லத்தின் திறப்பு விழா நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.